Friday, December 25, 2015

Tholvi Nilayena Ninaithaal









தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்
விடிந்தும்  மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்   பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய்  வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்   பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா

No comments:

Post a Comment