Thursday, June 9, 2016

                                              



கணவன் மனைவி அன்பு....!😍😍😍

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம்
என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன்
மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு
பாத்திரங்களை ஒதுக்கி விட்டு
வரும் மனைவியிடம் ....
"நீ சாப்பிடவில்லையா ?"
என்று கணவன் கேட்க ....
"எனக்கு பசியாக இருந்தது.
அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே
உண்டு முடித்து விட்டேன்
"என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
சட்டையை மீண்டும்
மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம்"
இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ? "
என்று கேட்டவளுக்கு ...
"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன் "
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து
நல்ல ஹோட்டலில்
ருசியான உணவு வாங்கி வந்து ...
"இந்தா சாப்பிடு... "
என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....
அதற்குப் பெயர்தான்,,
!!~~அழகான வாழ்க்கை~~ !!

No comments:

Post a Comment