Saturday, July 23, 2016

ஆந்தை ரிப்போர்ட்டர். சுவாதி கொலை

.
Infosys ‪#‎swathi‬ rengs கொலையாளி பிடிப்பட்டது குறித்து
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் ராம்குமார் (22), மெக்கானிக்கல் என்ஜினியரான இவ்ன் சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டின் அருகே விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்தா்ன். இந்நிலையில், சூளைமேடு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வரும் சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளா்ன். சுவாதி தனியாக செல்லும் போதுஅவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளா்ன். ஆனால், அதற்கு சுவாதி மறுத்ததாக தெரிகிறது. எனினும் ஒருதலை காதலால் ராம்குமார், சுவாதி பின்னால் சுற்றியுள்ளா்ன்.
சம்பவத்தன்றும், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வைத்து சுவாதியிடம் அவர் காதல் குறித்து பேசியுள்ளா்ன். சுவாதி மறுக்கவே, ஆத்திரமடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளா்ன்.
கொலைக்கு அவர் பயன்படுத்திய அரிவாள் தென்மாவட்டத்தை சேர்ந்தது என்பது இந்த கொலை வழக்கில் கொலையாளியை கண்டுபிடிப்பதில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
துப்பு கொடுத்த காவலாளி: சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் காவலாளி பத்திரிகையில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு போலீ சாருக்கு ராம்குமார் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார். ராம்குமாரை பிடிக்க சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று காலை முதலே அவரது வீடு இருந்த பகுதியில் நோட்டம் விட்டு வந்துள்ளனர். நள்ளிரவு அனைவரும் தூங்கிய பிறகு அவரை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனை பார்த்த ராம்குமாரின் தாத்தா வீட்டின் கதவை அடைத்து குரல் எழுப்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்குள் தடாலடியாக புகுந்த போலீசார் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் ராம்குமாருக்கு கழுத்து பகுதியில் 16 தையல் போடப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் அவரை கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனையில் வைத்தே ராம்குமாரிடம் போலீசார்
ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்துள்ளனர்.
இதில், அவர் தான் கொலை செய்ததை ஒப்பு கொண்டதாக தெரிகிறது. அதேபோல, ராம்குமாரின் தந்தை பரமசிவன், அவரது தாய், தம்பி மற்றும் தங்கையிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழுமையான் செய்திகளுக்கு :
http://www.aanthaireporter.com/swathi-murder-suspect-held-…/
Homepage»Uncategorized»சுவாதி கொலைகாரனை பிடிக்க போலீஸ் அனுப்பிய எஸ் எம் எஸ்! Uncategorized சுவாதி கொலைகாரனை பிடிக்க போலீஸ் அனுப்பிய எஸ் எம் எஸ்! By aanthai on July 2, 2016 / 0 Comments சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் இன்போசிஸ் சுவாதி, கடந்த 24ம் தேதி(ஜூன் 24) சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில...
AANTHAIREPORTER.COM|BY AANTHAI

No comments:

Post a Comment