Monday, July 18, 2016

வணக்கம் என் சகோதரனே.. நான்தான் ஸ்வாதி பேசறேன்.From, the FB of Mariya Devasy














வணக்கம் என் சகோதரனே..
நான்தான் ஸ்வாதி பேசறேன்.
நல்லாருக்கியா ? வீட்ல அப்பா அம்மா நலமா ?
உன் கல்யாணம் நல்லபடியா நடக்க என் வாழ்த்துக்கள்.
அப்புறம் மீனா வ (தங்கை) பத்திரமா பாத்துக்க அண்ணா.
பினம் தின்னி கழுகுகளிடம்.
ஏன் அண்ணா ? நான் பெண்ணா பிறந்தது தப்பானா ?
எதுக்குனா என்னை கொன்னாங்க.
எனக்கு வாழனமுனு ஆசை.
என் மகளுக்கு உன் மடியில் வச்சு காது குத்த ஆசைப்பட்டேன் .
ஆனா பாவிங்க என்னை கொன்னுட்டாங்களேனா?
ஒருத்தன் பொன்னுங்களை காமவெறிக்கு கூப்டேன்
வரலனு சொன்னா அதனால கொன்னேனு சொல்றான்.
இன்னொரு பக்கம் என் பொண்டாட்டி வேசி ஆடுனா பிடிக்கலை கொண்ணுட்டேனு சொல்றான்.
ஒரு பக்கம் என்னை அவ லவ் பண்ண முடியாதுனா கொன்னுட்டேனு சொல்றான்.
இன்னொரு பக்கம் என் குடும்பத்து பொன்னு இன்னொருத்தன லவ் பண்ணா அதனால கௌரவ கொலை பண்ணோம்னு சொல்றான்.
நீ.சொல்லுனா
பொண்ணுங்க ஆம்பளைங்க யூஸ் பன்ற மெஷினா ?
இன்னைக்கு நான் நாளைக்கு நம்ம மீனா லட்சுமி சீதானு ஒவ்வொரு பொண்ணா கொன்னுட்டே போவாங்களா அண்ணா?
உங்கள மாதிரி அண்ணணுங்க காப்பாத்துவீங்கனுதான் பஸ்ஸ்டாண்ட் ரெயில்வே ஸ்டேஷன் கல்லூரி அலுவலகம் வாரோம்.
அண்ணா
உன் தங்கச்சிக்கு உன் அக்காவுக்கு இப்படி ஒன்னு நடந்தா கைகட்டி வேடிக்கை பார்ப்பீங்களா அண்ணா..
நான் யாரோனு நினைச்சிட்டாங்க.
பரவாயில்லை அண்ணா .
நான் ஒரு பொண்ணா செத்தது கூட நல்லதுதான்.
பல பொண்ணுங்க ஆண் உருவத்தில் கோழையாக திரிவதை பார்க்கிறப்போ செத்தது தேவலாம்னு நினைக்கிறேன் அண்ணா..
எங்கேனா மனித உரிமை கமிஷன் .
எங்கேனா நீதிமன்றங்கள்.
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாத நீதிமன்றம்?
கமிஷன் வாங்கிட்டு போய்ட்டாங்களா ?
மாதர் சங்கம் சிம்பு பீப்சாங்க் பாடுனானு கொடி புடிஞ்சாங்களே..
இப்போ ஒரு பெண்ணே செத்து கிடக்கிறேன்.
எங்கே அந்த பீப்புகள் அண்ணா.
எந்த அரசியல் கட்சியும் கூட இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கலயே அண்ணா..
நீயும் அப்படியே சுயநலமா இருந்துடாத அண்ணா.
அண்ணா புரட்சி எடு அண்ணா .
உன்னை நான் நாட்டை எதிர்த்து போராடுனு சொல்லல.
உண்மையில் நீ ஒரு நல்ல அண்ணண்ணா
இந்த ஐடியில் இருப்பது எல்லாமே ஆண்கள்தான்னா
நான் சொல்றத ஷேர் பண்ணுணா.
இது ஒவ்வொரு தமிழன் காதிலும் விழட்டும்.
அது குறைந்தபட்சம் என்னைப்போன்ற சுவாதிகளை காப்பாற்றும்.
இப்பொழுதாவது எனக்கு இதை கூட செய்யாமல் போனால் நீயும்
என்னை கொலை செய்த கூட்டத்தை சேர்ந்தவனுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் அண்ணா.
நான் சுவாதி பேசுறேன் அண்ணா.

No comments:

Post a Comment