Tuesday, August 18, 2015

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை  தெய்வம் அன்றி யாரும் இல்லை தந்தை இல்லை தாயும் இல்லை  தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா ஊனம் உள்ள பேரைக் காத்திடும் இறைவா என் இறைவா ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில் ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில் உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம் கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை  தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 



No comments:

Post a Comment